ஸந்தியாவந்தன போட்டிகள்

ஸந்தியாவந்தன போட்டிகள் ரிக்வேத யஜுர்வேத ஸாம வேதங்களுக்கு தனித்தனியே 15-08-10 ஞாயிறு காலை 8.00 மணி முதல் மேல மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் நடைபெறும் , இதில் ஸந்த்யாவந்தன மந்திரங்கள் (மனப்பாடம்) மற்றும் செயல் முறை விளக்கங்களில் கேள்விகள் கேட்கப்படும், வெற்றி பெற்றவர்களுக்கு 15-08-10 ஞாயிறு மாலை ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் முன்னிலையில் ஸர்டிபிகேட்டும் பரிசுகளும் வழங்கப்படும், முதல் பரிசு ரூ 1000 (1நபர்), இரண்டாம் பரிசு ரூ 500 (3நபர்) மூன்றாம் பரிசு ரூ 250 (6நபர்) ஆறுதல் பரிசு ரூ 100 (10நபர்)இந்த போட்டிகளில் ஸுமார் ஏழு வயது முதல் 18 வயதுள்ள அனைவரும் கலந்து கொள்லலாம். விபரங்களுக்கு வைதிகஸ்ரீ: 04424361210- 24361211.


வைதிகஸ்ரீயின் புத்தம் புதிய வெளியீடு

தர்மமான தர்ம சாஸ்திரம் ஆங்கிலம் 3ஆம் பாகம்

விலை ரூ 40 மட்டும்


வைதிகஸ்ரீயின் ஆன்மிக விளக்கக்கூட்டம்
வைதிகஸ்ரீயின் ஆன்மிக விளக்கக்கூட்டம் இந்த மாதம் முதல் ஒவ்வொறு மாதமும் சென்னை குரோம்பேட்டை வஸந்த மண்டபத்தில் நடைபெற ஏரறபாடகியுள்ளது, இந்த மாதம் 11-07-2010 ஞாயிறு மாலை 06-30 மணி முதல் 08.00 மணி வரை நடைபெறும,
இதில் ஆன்மிக ஸம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் இயன்றவரை பதில் தரப்படும,
மேலும் விபரங்களுக்கு ப்ருஹமமஸ்ரீ ஆனந்த சாஸ்திரிகள் குரோம்பேட்டை போன் 98401 55313


வைதிக ஸ்ரீ எட்டாம் ஆண்டு துவக்க விழா

நாள் 13.08.10 வெள்ளி முதல் 15.8.10 ஞாயிறு
இடம் ஸ்ரீ அயோத்யா அவமேத மண்டபம் மேலமாம்பலம், சென்னை600033.
நிகழ்ச்சி ஆன்மிக கருத்தரங்கம் விவாதங்கள்போட்டிகள் வைதிகஸ்ரீ விருதுகள்


New (Shopping cart ) facility For buyers Click Here

வைதிகஸ்ரீ புஸ்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய Click Here

 

வைதிக்ஸ்ரீ மாத இதழுக்கு சந்தா கட்டட- சந்தாவை புதுப்பிக்க-Click Here

You can Pay your subscription -Renewal Amount By online Click Here

 

You can find -Verify  subscription period & Address Details Click Here 


சந்தா காலம்
- விலாஸம் முதலியவற்றை  ஸரிபார்த்துக்கொள்ள
Click Here 


வைதிகஸ்ரீ வாசகர்களுக்கு அறிவிப்பு

  • நமது சாஸ்திர ஸம்பிரதாயங்களும் வேத சாஸ்திர கருத்துக்களும் மக்களை சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் வைதிகஸ்ரீ மூலம் தர்ம பிரசாரம் லாப நோக்கமின்றி கடந்த ஏழு வருஷங்களாக செய்து வருகிறோம்,

  • இந்த பத்திரிக்கை பிரிண்ட்க்கு ஆகும் சிலவும் அதன் விற்பனை மூலம் வரும் வரவும் மிகவும் ஏற்றத்தாழ்வுடன் கூடியது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள. விளம்பரங்களின்றி வெளிவரும் பத்திரிக்கை இதுதான்.

  • இந்த பத்திரிக்கை அனைவரையும் சென்றடைய தபால் துறையின் உதவி மிகவும் தேவைப்படுகிறது, அதை நாங்களும் பயன்படுத்திக் கொள்கிறோம,

  • ஸாதாரணமாக ஓரு மாதம் வைதிகஸ்ரீயை தபால் மூலம் அனுப்ப ஓவ்வொரு புஸ்தகத்துக்கும் ரூ 8.00 வீதம் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும. அரசாங்கத்தில் சலுகை பெற்று நாங் கள் ரூ0.50 பைசாமட்டுமே தபால் தலை ஒட்டி அனுப்புகிறோம.

  • இந்த தபால் சிலவை நாங்கள் ஸந்தாதாரர்களிடம் வசூலிப்ப தில்லை, நாங்கள் எங்கள் சிலவிலேயே அனுப்புகிறொம,

  • சந்தாதொகை மட்டுமே வாசகர்களிடம் பெற்றுக் கொள்கிறோம,

  • இதற்காக தபால் துறை விதிக்கும் பற்பல கட்டுப்பாடுகளையும் நாங்கள் செயல்படுத்த வேண்டியுள்ளது

  • இவ்வாறு நாங்கள் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் புஸ்தகங்கள் அனுப்பும் போது ஒரு சிலருக்கு புஸ்தகம் ஸரியாக சென்று சேருவதில்லை என்பதை நாங்கள் நன்கு அறிகிறோம.

  • இதற்கான பற்பல காரணங்கள் உண்டு அதாவது

  • ஸந்தாதாரர்கள் தாங்களின் விலாஸத்தை முழுமையாக (புது எண்-பழையஎண் அப்பார்ட்மெண்ட் பெயர் போன்ற) விபரங்களை தராதது

  • சந்தாவை புதுப்பிக்காமல் இருப்பது (தாங்களின் சந்தா மற்றும் விலாஸ விபரங்களை ஏந்நேரமும் ஸரிபார்க்க எங்கள் வைதிகஸ்ரீ டாட் காம் வெப் ஸைட்டில் வஸதி ஸேய்துள்ளோம,

  • (மணியார்டரில்) பணம் அனுப்பி விட்டு விலாஸம் தராமலிருத்தல்


  • நாங்கள் அனுபியும் வைதிகஸ்ரீ கிடைக்காமல் போக காரணங்கள்

  • தாங்கள் வஸிக்கும் போஸ்ட் ஆபீஸ்காரர்களின் தவறுதல்

  • தாங்கள் வஸிக்கும் அபார்ட்மெண்ட்காரர்கள் (அழகான அட்டைப் படத்துக்கு ஆசைபட்டு) எடுத்துக் கொள்ளுதல்

  • தாங்கள் அறியாமலேயே தாங்கள் வீட்டில் இருப்பவர்கள் வைதிகஸ்ரீயை வாங்கி வைத்திருத்தல் போன்ற பல காரணங்கள்


  • இதற்கு ஸொல்யூஷன் தீர்வு

  • தாங்கள் இரண்டு வருடம் சந்தா கட்டியிருக்கும் பக்ஷததில் தாங்களோ அல்லது தாங்களைச்சார்ந்தவர்களோ ஆபீஸுக்கு நேரில் வந்து அதிகமான ஒரு காப்பியை இலவஸமாக பெற்றுக் கொள்ளுதல்

  • அல்லது ஒவ்வொரு வாரமும் ஆங்காங்கே வைதிகஸ்ரீயின் ஆன்மிக விளக்கக்கூட்டம் நடைபெறும் இடங்களில் வந்து வாங்கிக் கொள்ளலாம.

  • கொரியர் மூலம் அனுப்ப அதற்கான தொகையை செலுத்தி வேண்டுகோள் விடுத்தால் ஒவ்வோரு மாதமும,கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் கொரியர் தொகையை ஆபீஸில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

  • வைதிக தர்மங்களை ப்ரசாரம் செய்து மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் எங்களுக்கு தாங்கள் சட்ட திட்டங்கள் பேசாமல் ஆதரவளித்து ஊக்கப்படுத்த வேண்டுகிறோம.

Previous Vaithikasri Sathsanga (Meeting) Details,  Click Here

* http://subhakariam.blogspot.com -

* Interview with  Bramhasri.V.Rajagopala Ganapatigal

 Back