Vaithikasri September 2009


|
தேவர்கள் பித்ருக்கள், மனிதர்கள் என்னும் வேறுபாட்டுக்கான பல காரணங்களில் உடலமைப்பு மாறுபாடும் ஒரு காரணம், அதாவது ப்ருத்வீ(மண்), அப்(ஜலம்), தேஜஸ் (நெருப்பு), வாயு(காற்று), ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்ளின் கூட்டுக் கலவையே மனித உடல், ஒவ்வொருவரின் உடலிலும் சதை, மாம்ஸம், தோல் முதலானவைகள் பார்த்திவம்(மண்ணைச்சேர்ந்தவை), ரத்தம் ஜலத்தின் அம்சம், உணவு ஜீரணமாவது நெருப்பின் அம்சத்தால், ப்ராணன் முதலான ஐந்து பெயர்களுடன் காற்றாக வாயு ஸஞ்சரிக்கிறார். உடலில் இருக்கும் இடைவெளிதான் ஆகாசத்தின் அம்சம், இதைப்போலவே தான் பித்ருக்களின் உடலமைப்பும் , ஆனால் மனுஷ்யர்கள் பித்ருக்கள் என்னும் வேறுபாடு பஞ்சபூதங்களின் சேர்க்கையின் அளவு வேறுபாட்டால் தான், அதாவது மனித உடலில் ஸுமார் 80% மண்ணின் பகுதி, மற்ற 20% தான் மீதமுள்ள ஜலம், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகியவற்றால் உருவானவை. ஆனால் பித்ருக்களின் சரீரமோ 80% (பகுதி) ஜலத்தால் ஆனவை, மற்ற 20% தான் மண், நெருப்பு, காற்று, ஆசாரத்தால் ஏற்படுத்தப்பட்டவை, ஆகவேதான் மனிதர்கள் மண்ணில் விளையும் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள்.மனிதன்உயிர்வாழமண்ணில்விளையும் உணவே மூலப்பொருள் இதைப்போலவே ஜலமய சரீரமான பித்ருக்கள் ஜலத்தை மட்டுமே ஆஹாரமாகக் கொண்டு தனது உடலை பாதுகாக்கிறார்கள், ஆகவேதான் பித்ருக்களுக்கு அடிக்கடி தர்ப்பணங்கள் செய்கிறோம், இதுவே பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் உணவு, மற்ற நாட்களில் செய்யும் தர்பணங்களைவிட மஹாளயபக்ஷ தர்பணம் மிகவும் முக்கியம் வாய்ந்தது, ஏனென்றால் அமாவாஸை போன்ற மற்ற தர்பணங்களில் (அப்பா அம்மா முதல், தாத்தா பாட்டி முதல் என) மொத்தம் 12 பேருக்குத்தான் தர்ப்பணம் செய்யப்படுகிறது, ஆனால் மஹாளயபக்ஷத்தில் அப்பா வர்கம், தாத்தா வர்கம் மற்றும் மாமா, பெரியப்பா, சித்தி,அத்தை, குரு நண்பன் முதலான ஸுமார் 50 பேருக்கும் தர்பணம் செய்ய முடிகிறது, காருணிகர்களான இவர்கள் அனைவரும் நம்மை மனப்பூர்வமாக ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்களின் அனுக்ரஹம் மிக சக்தி வாய்ந்தது. அதிலும் காருணிக பித்ருக்களின் அருள் நம்மை பற்பல இக்கட்டிலிருந்து கஷ்டத்திலிருந்து, துன்பத்தினின்று காப்பாற்றும், நமது துக்கத்தைப் போக்கிக் கொள்ள மஹாளயபக்ஷம் முழுவதும் 16 நாட்களும் பித்ருக்களுக்கு தர்பணம் செய்வது மிகச்சிறந்த சுலபமான வழி. ஸ்ரீ பகவான் இதற்கு அனுக்ரஹிக்கட்டும். |
|
|