Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri November 2009 
E Mail: vaithikasri@yahoo.com

 பிறந்தது  ஓர் ஊர், வாழ்வது மற்றொரு ஊர் என்பதுதான் பலரது தற்போதைய வாழ்க்கை முறை, தேசத்தில் எங்கு வாழ்ந்தாலும், ஏன் வெளி தேசம் சென்றாலும் கூட நமது பிறந்த ஊர்படித்தபள்ளி போதித்தஆசிரியர் கோவில் கோவிலில் நடைபெற்ற திருவிழாக்கள் போன்றவற்றை என்றும் யாராலும் மறக்க முடியாது , மனதின் ஒருஓரத்தில் இவை ஓடிக்கொண்டுதான் இருக்கும்,

 குளத்தில்(நதியில்) ஸ்னானம் நித்ய சிவ விஷ்ணு ஆலய தரிசனம் நாகரீகம் புகாத கிராம மக்கள், நாம் இந்த மண்ணில் பிறக்க நமது பெற்றோருக்கு வரமளித்த ஆலய தெய்வங்கள், குலதெய்வம், பூஜை முறைகள், ஆசாரம் அனுஷ்டானம் என நாம் கிராமத்தில் வாழ்ந்த கிராம வாழ்க்கையை நினைத்தாலே மறுபடியும்  கிராமத்தில் வஸித்தால் தேவலாம் போலிருக்கிறது

 

ஆகவேதான் ஜனனீ  ஜன்ம பூ4மிஸ்ச ஸ்வர்கா3த3பி க3ரீயஸீ பெற்ற தாயும் பெற்ற மண்ணும் ஸ்வர்கத்தைக்காட்டிலும் மேலானது என்கிறது சாஸ்திரம்.   நாம் இந்த கிராமத்து பழக்க வழக்கங்களை ஆசாரங்களை ஸம்ப்ரதாயங்களை ஆரோக்யமான வாழ்க்கைமுறையை நமது ஸந்ததியினருக்கும்  சொல்லிக்கொடுக்க வேண்டும்

 

நாம் பிறந்த மண்ணுக்கு  கிராமத்துக்கு கிராமத்து மக்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா? கடவுள் கிருபையால் நாம் இன்று நமது முன்னோர்கள் போல் கஷ்டப்படவில்லை, வீடு, கார், பணம், புகழ், பதவி, சுற்றார் என ஸுக வாழ்வு வாழ்கிறோம் , ஸரிதான், இத்துடன் நாம் செய்ய வேண்டியது ஒன்று உண்டு, அதாவது கிராமத்தில் நாம்பிறந்த வீட்டை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும், அல்லது பிறந்த ஊரில் நமக்கென்று  சொந்தமாக ஓர் வீடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,

 

ஸமயம் கிடைக்கும்போது  குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிராமத்தில் போய் தங்கி, கிராம வாழ்க்கையை ஆசாரங்களைகுடும்ப ஸம்ப்ரதாயங்களை குழந்தைகளுக்கு போதிக்க கள்ளங்கபடமில்லாத ஏழை மக்களுடன் பழகவருடாவருடம் செய்யும் சிராத்தத்தை  ஆசாரத்துடன் செய்ய, கிராமத்து மக்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச்செய்ய நமக்கென்று கிராமத்தில் ஓர் வீடு கட்டாயம் தேவை.

 

வியாபார நோக்கத்தில் எங்கெங்கோ வீடு (சொத்து வாங்குகிறோம்), ஆனால் நமக்காக, நமது கலாசாரத்துக்காக, நாம் பிறந்த ஊரில் ஓர் வீடு தேவை, ஆகவே ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த கிராமத்தில் சொந்தமாக ஓர் வீடு வாங்கி, அவ்வப்போது அங்குன் சென்று குடும்பத்துடன் ஸந்தோஷமாக கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து நலம்பெற, ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Back