Vaithikasri June 2009வைதிக ஸ்ரீ:

கலியுகத்தில் மக்கள் மேன்மையடைய மிகச்சுலபமான வழி ஸத்ஸங்கம் என்பதுதான், அதாவது ஸாதுக்களுடன் சேர்ந்து கொள்வது, மஹாந்தஸ்தே ஸமசித்தா: ப்ரசாந்தா:  என்னும் ஸ்ரீ பாகவத வசனப்படி தன்னலம் கருதாது  வேற்று மனப்பான்மையின்றி  மக்களுக்கு நன்மையை போதிப்பவர்களே ஸாதுக்கள் மஹான்கள்  ஆசார்யர்கள் எனப்படுகிறார்கள், பாரததேசம் முழுவதும் சுற்றிவரும் இவர்கள் இன்றும்கூட ஸதுபதேசம் ப்ரவசனம் நாம ஸங்கீர்த்தனம் மூலம்  மக்களுக்கு நன்மை செய்கிறார்கள், இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதே ஸத்ஸங்கம் எனப்படுகிறது,

தற்சமயம் மக்கள் சிலர் இப்படிப்பட்ட ஸாதுக்களிடம் தொடர்பு கொள்கிறார்கள் என்றாலும் பலரால் ஸுலபமாகத்தொடர்புகொள்ள இயலவில்லை, இவர்களுடன் தொடர்புகொள்ள, இவர்களின் வருகைக்காக, இவரது நல்லுபதேசத்தைக் கேட்க  பலரும்  காத்திருக்கிறார்கள், ஆனால்  நிர்வாகக் காரணங்களுக்காக மஹான்களைச் சுற்றி நிருத்தப்பட்டுள்ள ஒரு சிலர், ஏதோ காரணங்களைக் கூறி இவர்களை ஸுலபமாக நெருங்கி விட முடியாமல் தடுக்கிறார்கள் என்கிறார்கள் பலர் பணம், பதவி, ஸுகம் ஆகியவற்றுக்குக் கட்டுப்படாத மடாதிபதிகள் பீடாதிபதிகள் ஆசார்யர்கள் குருமார்கள் பாகவதர்கள் ஆகியோர் கூட தன்னைச்சுற்றி இருக்கும் ஒரு சிலரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களோ எனத்தோன்றுகிறது, கலியுகத்தின் பாதிப்பு ஸத்ஸங்கத்திலும் ஏற்பட்டுள்ளதோ எனத்தோன்றுகிறது,

ரோஜாமலரைச் சுற்றிலும் முட்கள் இருப்பதைப்போல் ஸாதுக்களைச்சுற்றிலும் ராக த்வேஷ முள்ளவர்கள் இருக்கிறார்கள் ,வைகுண்டத்தில் பகவானைக் காணச் சென்ற ஸனகாதி முனிவர்கள் கூட காவலாளிகளால் (ஜய விஜயர்களால்) தடுக்கப்பட்டார்கள் என்கிறது ஸ்ரீ பாகவதம், ஆனால்   தன்னைச் சுற்றிலும் இப்படி ஒரு சூழ்நிலை இருப்பதை , தன்னை ஸுலபமாக மக்கள் நெருங்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையை  இவர்கள் அறிந்து கொண்டுள்ளார்களா? என்பதே ஸந்தேஹம்தான்,.

ஆகவே ஸாதுக்கள், மஹான்கள், பாகவதர்கள், பீடாதிபதிகள், ஆசார்ய புருஷர்கள்ஆகியோர், தன்னை கட்டுப்படுத்தும் ஸமூகத்திலிருந்து வெளிவந்து, எப்போதும் யாராலும் சிரமமின்றி அனுகக்கூடியவர்களாகவும், தான் எங்கு செல்லலாம், எங்கு செல்லக்கூடாது, யாருடன் பேசலாமா? யாருடன் பேசக்கூடாது என்பதை ஸ்வயமாக சிந்தித்து முடிவெடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.  இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Back