Subhashithani (Tamil) Part 1) ஸுபாஷிதங்கள் - நன்மொழிகள்

Sample of Subhashithas

220 விஷயங்கள் அழகான கார்டூன் படங்களுடன் கையடக்கமாகத்தொகுக்கப்பட்டுள்ளன,
நம் வீட்டுக்கு வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நன்பர்களுக்கு அன்பளிப்பளிக்கவோ பரிசளிக்கவோ மிகச்சிறந்த புஸ்தகம் விலை ரூ 50 .00 மட்டும்

தத் போ4ஜனம் யத் த்3விஜ பு4க்த ஷம் தத் ஸௌஹ்ருதம் யத் க்ரியதே பரஸ்மின்
ஸா ப்ராக்ஞதா யா ந கரோதி பாபம் த3ம்ப4ம் விநா ய: க்ரியதே ஸ த4ர்ம:

பசியால் வாடும் மற்றவர்களுக்கு முதலில் உணவளித்து விட்டு பிற்பாடு தான்சாப்பிடும் உணவே நல்ல உணவாகும்.  தன்னு-டை-ய உறவினர்கள் அல்லாத மற்றவர் களிடத்தில் காட்டப்-ப-டும் தூ-ய நட்பே உண்மையான நட்பாகும். எந்தச் சூழ்நி-லை-யி-லும் எங்-கும் எப்-போ-தும் எந்த ஒரு பாவச்(தவறான)செயல்களையும் செய்யாமல் இருக்கும் ம-னி-த-னே அ-னைத்-தை-யும் கற்-றறிந்த சிறந்த அறிவாளி என பு-க-ழப்-ப-டு-கி-றான். எந்த ஒரு ஆடம்பரமோ (விளம்-ப-ர-மோ), (தான்தான் செய்-கி-றோம் என்-னும்) அஹங்காரமோ (-செ-ருக்கோ) சிறுதும் இல்லாமல் செய்யப்படும் தர்மமே உண்மையான தர்மமாகும்.

து1ஷ்யந்தி போ4ஜனே விப்ரா: மயூரா: க4ன க3ர்ஜிதே
ஸாத4வ: பர ஸம்பத்தௌ கலா: பரவிபத்திஷ

நல்ல ஸுவையான போஜனத்தினால் (சாப்பாட்டினால்) அந்தணர்கள் ஸந்தொஷமடைகின்றார்கள். மேகங்கள் நன்கு கர்ஜனை செய்வதால் மயில்கள் ஸந்தோஷ மடைகின்றன. (தன்-னைச்-சே-ராத) மற்ற ம-னி-தர்-களின் மேன்மையைக்-கண்டு ஸாதுக்கள் (பெரியோர்கள்) ஸந்தோஷ மடைகின்றனர். தன்-னைச்-சே-ரா-த மற்-ற-வர்களின் துன்பத்தைக்-கண்டு (துஷ்டர்கள்) தீயவர்கள் ஸந்தோஷ மடைகின்றனர்.

தீர்த்த2தோயம் தத:புண்யம் க3ங்காதோ1யம் ததோ4திகம்
பாவக: பவமானஸ்ச சிரக்னி: த்ரயஸ்ச தே

பாவங்களைப் போக்கி தூய்மைப் படுத்துவதில் புண்ய க்ஷேத்ரங்களில் (பாடல்பெற்ற தலங்களில்) உள்ள புஷ்கரிணீ என்னும் தீர்த்தம் (குளம்) மிகவும் சக்தியுள்ளது. அவைகளைக் காட்டிலும் ம-னி-தர்-க-ளின் பாவங்களைப் போக்கி தூய்மையாக்குவதில் கங்கையின் தீர்த்தத்துக்கு சக்தி அதிகம். ம-னி-தர்-களை தூய்மைப-டுத்-தி-வ-தில் கங்கையை விட அக்னிஹோத்ரம் முதலிய ஹோமங்களில் ஆ-ரா-திக்-கப்படும் அக்னி:பவமானன், அக்னி:பா வகன், அக்னி:சுசி என்னும் பெயர்களையுடைய (த்ரேதா) மூன்று அக்னிகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள்.