தர்ம சாஸ்திரம் தமிழ் part-1

In this book this type of Clarifications Sastra  More Then 220 Subjects

கூடாது கூடாது கூடாது

  • செய்ய வேண்டிய தர்மத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கு முன்பாக செய்யக்கூடாதவை களான செயல்களைத் தவிர்க்க முயல வேண்டும், வேத சாஸ்த்ர புராணங்களிலும், நமது கலாசாரம்,பண்பாடு இவைகளிலும் நம்பிக்கையுடைய ஆன்மீக மக்களுக்காக ஆபஸ்தம்பர், கௌதமர், ஆச்வலாயனர் போன்ற மஹரிஷிகளால் எழுதப்பட்ட தர்ம சாஸ்திர புஸ்தகங்களிலும்,மற்றும் ஆசார(ஒழுக்க)முள்ளவர்களின் நடத்தையையும், நன்கு ஆராய்ந்து தர்மங்களை ஒன்று திரட்டி தனி புஸ்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

  • தர்ம சாஸ்திரம் தமிழ் புஸ்தகத்தில் நாம் செய்யக்கூடாத சிற்சில தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாஹரணமாக

  • ஸ்னானம் செய்வதற்கு (குளிப்பதற்க்கு) முன்பாக நெற்றியில் சந்தனத்தை இட்டுக் கொள்ளக் கூடாது. 259

  • ஈரமான (உலராத) உடையை உடுத்திக் கொண்டு பூஜை, அர்ச்சனை, போன்ற தெய்வ வழிபாட்டைச்செய்யக்கூடாது.4

  • விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது விளக்கின் எண்ணையிலுள்ள தூசியை கை விரலால் எடுக்கக்கூடாது. (இது தரித்ரத்தைத் தரும்) 232

  • மணியடிக்கும் ஓசையில்லாமல் எந்த பூஜையையும் செய்யக் கூடாது.

  • தலைப்பு (நுணி) இல்லாத உடைகளையும் , கரைகள் இல்லாத உடையையும் , மற்றும் நெருப்பு பட்ட துணிகளையும் உடுத்திக் கொள்ளக்கூடாது.82.

  • ஆண்கள் தெய்வங்களை வழிபடும் பொழுது தையல் உள்ள (தைத்த) சட்டையை அணியக்கூடாது.94.

  • எந்த இடத்திலும் எப்பொழுதும் வடக்கு திசையில் தலையை வைத்து தெற்குதிசையில் கால்களை நீட்டி படுத்துக் கொள்ளக்கூடாது.27

  • பூசணிக்காயை (கூமாண்டத்தை)பெண்கள் உடைக்கக் கூடாது. (ஆண்கள் தான் உடைக்கவேணும்)7

  • செடி நடுவது , மரங்கள் நடுவது, வபனம் (ஷேவ்) செய்து கொள்வது, வயலில் விதை தெளிப்பது, ஆகியவற்றை இரவு நேரத்தில் செய்யக்கூடாது.57. *யாக வேதியில் ஹோம குண்டத்தில் பரப்பப்பட்ட ஹோமங்களில் உபயோகித்த தர்பங்களை மறுபடியும் உபயோகிக்கக் கூடாது.128. * ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாஸை வந்தால் அந்த மாதத்தில் சுப(மங்கள) காரியங்களை நடத்தக்கூடாது (இது அதிக மாஸம் எனப்படும்)10

  • இதைப்போல் ஸுமார் 220 விஷயங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் அடங்கியுள்ளன. அதாவது ,ஆலயத்தில்..

  •  தெய்வ வழிபாட்டில்..

  • பூஜை கள் செய்யும் போது..

  •  ஸ்னானம்

  • குளியல்

  •  உடை

  •  உணவு முறைகள்

  • படுக்கும் போது..

  • ஆண்களுக்காக...

  • மாதர்களுக்காக..

  •  குறிப்பிட்ட நேரத்தில்..

  • தனி நபர் கட்டுப்பாடு.

  • ..நமஸ்காரம்..

  • சுபகார்யங்கள் /மங்கள நிகழ்ச்சிகள் ,

  •  பித்ரு பூஜனம்...

  •  மற்றவை..

  • என ஸுமார் 15 தலைப்புகளின் கீழ் 220 விஷயங்கள் அழகான கார்டூன் படங்களுடன் கையடக்கமாகத்தொகுக்கப்பட்டுள்ளன,

  • நம் வீட்டுக்கு வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நன்பர்களுக்கு அன்பளிப்பளிக்கவோ பரிசளிக்கவோ மிகச்சிறந்த புஸ்தகம்

  • விலை ரூ 25.00 மட்டும்